Thursday, February 27, 2014

தெய்வ வழிபாடு - தேய்பிறை திதிகளா? வளர்பிறை திதிகளா?

lord-shiva-57a

பொதுவாக கடவுளரை அக்கடவுளருக்குரிய திதி மற்றும் நட்சத்திரங்களில் வழிபாடு செய்ய வேண்டும்.  இது கடவுள் வழிபாட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஆகும்.  அவ்வாறு வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானதாகும்.  அவ்வாறு நாம் வழிபட்டால் கடவுளின் அருளும் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் நமது கர்ம வினைகள் நீங்கி நமது நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.

அவ்வாறு வழிபாடு செய்வதில் நட்சத்திரங்களில் பொதுவாக சந்தேகங்கள் வருவதில்லை.  ஆனால் திதிகளில் சந்தேகங்கள் வருவது உண்டு.  ஏனெனில் திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன.  இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம்.  நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.

உதாரணமாக பைரவர் வழிபாட்டினை எடுத்துக் கொள்வோம்.  பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும்.  இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன.  இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை.  அவற்றினை பயன்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே உண்டு.

முதலில் தேய்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம்.  தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தீர்க்க வேண்டிய துன்பங்களை தீர்க்குமாறு வேண்ட வேண்டும்.  தேய்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமது துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து அழிந்து போகும்.  எக்காரணம் கொண்டும் நம்முடைய தேவைகளை வேண்டுதல் கூடாது.

இப்போது வளர்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம்.  வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானவற்றை தருமாறு வேண்ட வேண்டும்.  வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.  எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.

நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள்.  இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும்.  தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் தொடங்கும்.  பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும்.  இதனை எந்த கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம்.  தவறில்லை.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, February 25, 2014

ஆஞ்சநேயரை வீட்டில் வணங்கலாமா?

hanuman3

சிவபெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச்சாரி மட்டுமல்ல ஒரு சிரஞ்சீவியும் ஆவார்.

ஆஞ்சநேயரின் வடிவங்களில் பல உண்டு.  அவையாவன:-

பால ஆஞ்சநேயர், சஞ்சீவிராய ஆஞ்சநேயர், ராமபக்த ஆஞ்சநேயர், தியான ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் பல.

பிரம்மச்சாரியான அனுமனை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதில் நம்மில் அனைவருக்கும் பல வித சந்தேகங்கள் உண்டு.  ராமபிரானின் பக்தனான அனுமனை வழிபடுவதில் உள்ள சந்தேகங்களை போக்கிடவே இந்த பதிவினை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட வடிவங்களை நாம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  சிலர் ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு.  ஏனெனில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரை வழிபாடு செய்பவரும் திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவார் என்ற மூடநம்பிக்கை பரவி இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

ஆனால் உண்மையில் அனுமன் ராமபிரானின் பக்தன் மட்டுமல்லாமல் ராமனின் உற்ற நண்பரும் ஆவார். சுந்தர காண்டத்தின் கதாநாயகன் அனுமன் இல்லாமல் ராமாயணம் ஏது?   பிரிந்து கிடந்த ராமன் மற்றும் சீதையை மீண்டும் ஒன்று சேர்த்தவர் வாயு புத்திரனான ஆஞ்சநேயரே ஆவார்.  இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தினால் உயிருக்கு போராடிய லட்சுமணனை சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உயிர்ப்பித்தவரும் ஆஞ்சநேயரே.  தமது நண்பன் சுக்ரீவனுக்கும் நல்வழி காட்டியவர் ஆஞ்சநேயரே.

நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூர்த்திகளில் ஆஞ்சநேயரும் ஒருவர்.  பஞ்சமுக ஆஞ்சநேயரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத் தக்கவர்.  ஆஞ்சநேயரின் வடிவங்களில் சஞ்சீவிராய ஆஞ்சநேயரே மிகவும் வலிமை மிக்கவர்.  இத்தகைய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வணங்கும் போது கட்டாயம் ராமபிரானின் படம் இருக்க வேண்டும்.

வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை நாம் செபம் செய்ய வேண்டும்.  நமது அனைத்து விதமான கோரிக்கைகளையும் அவரிடம் வைத்து வணங்க வேண்டும்.  கோரிக்கைகள் ஏதுமில்லாமல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யக்கூடாது.  அவ்வாறு கோரிக்கை இல்லாமல் செய்யும் வழிபாட்டால் வழிபாடு செய்பவர் ஆஞ்சநேயர் போல் பிரம்மச்சாரியாகவே இருந்து விட வாய்ப்புண்டு.  எனவே அனுமனிடம் திருமணத் தடை நீக்குமாறு வேண்டுவது உத்தமம்.

ஆஞ்சநேயரிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும்.  மேலும் இந்த பூவுலகில் ராமனை துதிக்கும் மக்களின் துதியை கேட்பதற்காகவே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வாழ்ந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம

Sunday, February 23, 2014

பைரவர் வழிபாடு - கட்டுக்கதைகளும் - உண்மைகளும்

bhairava

பைரவர் வழிபாடு என்பது மிகப் பழமையானதும், மிகவும் ரகசியமாகவும் வைக்கப்பட்டதுமான ஒரு அரிய முறை ஆகும்.  ஆனால் அன்னியர்களின் படையெடுப்பினால் இந்த அரிய முறைகள் பின்பற்றப்படாமல் மறைக்கப்பட்டன.  தற்போது பைரவர் வழிபாடு மீண்டும் தழைக்கத் தொடங்கியுள்ளது.  இந்த நவீன காலத்தில் இணையத்தில் பைரவ வழிபாட்டிற்கு ஆதரவாகவும், பைரவர் வழிபாட்டிற்கு எதிராகவும் வலைப்பூக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  உண்மையை சொல்லப்போனால் பைரவ வழிபாட்டிற்கு எதிராக ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது.

பைரவ வழிபாடு பற்றிய கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் இப்பதிவில் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அத்தகைய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் இவற்றை காண்போம்.

 

கட்டுக்கதை – 1:

பைரவரை வணங்கினால் வீட்டின் தலைமகனை காவு வாங்கி விடுவார்.

உண்மை:

பைரவர் அசூரர்களை அழிக்க அவதாரம் செய்த சிவனின் வடிவம்.  அவர் தம்மை வணங்குபவர்களையும் அவரது பரம்பரையையும் காத்து நிற்கும் உன்னதமான சிவ வடிவம்.  மனிதர்களை அழிக்க அவதாரம் செய்யவில்லை.  மனிதர்களை காக்கும் கடவுளே பைரவர் ஆவார்.

 

கட்டுக்கதை – 2:

பைரவரை வீட்டில் வழிபாடு செய்யக்கூடாது.

உண்மை:

பொதுவாக பைரவ வடிவங்களில் வீட்டில் வைத்து வழிபட தக்கவர் தன் மடியில் சொர்ணதாதேவியை அணைத்தவாறு உள்ள சொர்ணபைரவர் ஆவார்.  மற்ற பைரவர்களை வழிபாடு செய்யும் இடங்களும், காலங்களும் வெவ்வேறானவை.  மற்ற பைரவர்களை ஆலயங்களில் வழிபாடு செய்வதே சிறப்பானது.

 

கட்டுக்கதை – 3:

பைரவரை சந்நியாசிகள் தான் வழிபாடு செய்ய வேண்டும்.

உண்மை:

எல்லா பைரவர்களையும் எல்லோரும் வழிபாடு செய்யலாம்.  எல்லா பைரவர்களுக்கும் சக்தியர் உள்ளனர். அவர்கள் யோகினிகள் எனப்படுவர்.  பைரவர்கள் சிவசக்தி வடிவமாக உள்ளனர்.  சிவசக்தி வடிவங்களை யார் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம்.  பைரவர்களின் வழிபாட்டு முறைகளை குருமுகமாக தெரிந்து கொண்டு வழிபாடு செய்வதே சிறந்தது.

 

கட்டுக்கதை – 4:

பைரவருக்கு அசைவம் படைக்கலாம்.

உண்மை:

அசைவம் படைப்பது என்பது பெரும் பாவம் ஆகும்.  ஜீவகாருண்யமே சிவ வடிவங்களின் உண்மையான குணம் ஆகும்.  மாமிசம் என்பது பேரீச்சம்பழமே ஆகும்.  பேரீச்சம்பழத்தினை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.

 

கட்டுக்கதை – 5:

பைரவருக்கு மது படைக்கலாம்.

உண்மை:

மதுவினை படைத்தலும் பெரும் பாவமே ஆகும்.  உண்மையில் மது என்பது தேன் ஆகும்.  தேனை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நம:

Thursday, February 20, 2014

2014 ம் வருட முக்கிய திதிகள் மற்றும் நட்சத்திர நாட்கள்

lord-shiva-57a

வ.எண்

திதிகள் / நட்சத்திரங்கள் pdf வடிவில் jpg வடிவில்

1.

அமாவாசை Amavasai - 2014.pdf Amavasai - 2014.jpg
2. பௌர்ணமி Pournami  - 2014.pdf Pournami - 2014.jpg
3. தேய்பிறை சதுர்த்தி / சங்கடஹர சதுர்த்தி Sankadahara Chadhurthi - 2014.pdf Sankadahara Chadhurthi - 2014.jpg
4. வளர்பிறை சதுர்த்தி Valarpirai Chadhurthi - 2014.pdf Valarpirai Chadhurthi - 2014.jpg
5. தேய்பிறை சஷ்டி Theipirai Shashti - 2014.pdf Theipirai Shashti - 2014.jpg
6. வளர்பிறை சஷ்டி Valarpirai Shashti - 2014.pdf Valarpirai Shashti - 2014.jpg
7. தேய்பிறை அஷ்டமி Theipirai Ashtami - 2014.pdf Theipirai Ashtami - 2014.jpg
8. வளர்பிறை அஷ்டமி Valarpirai Ashtami - 2014.pdf Valarpirai Ashtami - 2014.jpg
9. தேய்பிறை நவமி Theipirai Navami - 2014.pdf Theipirai Navami - 2014.jpg
10. வளர்பிறை நவமி Valarpirai Navami - 2014.pdf Valarpirai Navami - 2014.jpg
11. தேய்பிறை துவாதசி Theipirai Dwadhasi - 2014.pdf Theipirai Dwadhasi - 2014.jpg
12. வளர்பிறை துவாதசி Valarpirai Dwadhasi - 2014.pdf Valarpirai Dwadhasi - 2014.jpg
13. தேய்பிறை பிரதோஷம் / மாத பிரதோஷம் Theipirai Thrayodhasi - 2014.pdf Theipirai Thrayodhasi - 2014.jpg
14. வளர்பிறை பிரதோஷம் / பட்ச பிரதோஷம் Valarpirai Thrayodhasi - 2014.pdf Valarpirai Thrayodhasi - 2014.jpg
15. தேய்பிறை சதுர்தசி / மாத சிவராத்திரி Theipirai Chadhurdhasi - 2014.pdf Theipirai Chadhurdhasi - 2014.jpg
16. பரணி நட்சத்திரம் Barani - 2014.pdf Barani - 2014.jpg
17. கிருத்திகை நட்சத்திரம் Kiruthigai - 2014.pdf Kiruthigai - 2014.jpg
18. திருவாதிரை நட்சத்திரம் Thiruvadhirai - 2014.pdf Thiruvadhirai - 2014.jpg
19. ஆயில்யம் நட்சத்திரம் Aayilyam - 2014.pdf Aayilyam - 2014.jpg
20. விசாகம் நட்சத்திரம் Visagam - 2014.pdf Visagam - 2014.jpg
21. மைத்ர முகூர்த்தங்கள் Maithra Muhurtham - 2014.pdf Maithra Muhurtham-2014-1
Maithra Muhurtham-2014-2
22. அனைத்து நாட்களும் .rar வடிவில் 2014 - PDF.rar 2014 - JPG.rar
23. அனைத்து நாட்களும் .zip வடிவில் 2014 - PDF.zip 2014 - JPG.zip
24. அனைத்து நாட்களும் .b1 வடிவில் 2014 - PDF.b1 2014 - JPG.b1
 
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 
ஓம் சிவ சிவ ஓம்
 

Tuesday, February 18, 2014

2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்

lord-shiva-55a

Maithra Muhurtham - 2014_Page_1Maithra Muhurtham - 2014_Page_2

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஸ்ரீ ஓம்  -  ஓம் சிவ சிவ ஓம் -  ஓம் ஸ்ரீ ஓம்

Sunday, February 16, 2014

2014 ம் வருட விசாகம் நட்சத்திரம் வரும் நாட்கள்

shanmugar, valli, deivanai, palani HILL SHANMUGAN GOOD QUALITY

Visagam - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ரீங் சரவணபவ

Thursday, February 13, 2014

2014 ம் வருட ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாட்கள்

agathiyar

Aayilyam - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, February 9, 2014

2014 ம் வருட கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்கள்

murughan

Kiruthigai - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சரவணபவ

Thursday, February 6, 2014

2014 ம் வருட பரணி நட்சத்திரம் வரும் நாட்கள்

ashta bairavar

Barani - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, February 4, 2014

2014 ம் வருட மாத சிவராத்திரி வரும் நாட்கள்

lor23a

Theipirai Chadhurdhasi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, February 2, 2014

2014 ம் வருட வளர்பிறை பிரதோஷம் வரும் நாட்கள்

lord-shiva-35s

Valarpirai Thrayodhasi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்